கொத்மலை நீர்தேகத்தில் நன்னீர் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்வு



க.கிஷாந்தன்-

நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை நீர்தேகத்தில் நன்னீர் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்வு 17.08.2017 அன்று இடம்பெற்றது.

17.08.2017 அன்று காலை 10 மணியளவில் மத்திய மாகாண தமிழ் கல்வி, விவசாயம், மீன்பிடி, சிறுகைதொழில், இந்து கலாசார அமைச்சர் எம். ரமேஸ்வரன் தலைமையில் கொத்மலை நீர்தேகத்தில் மீன்குஞ்சுகள் விடப்பட்டது.

இதன்போது சுமார் எழுபதாயிரம் மீன்குஞ்சுகள் நீர்தேகத்தில் முதற்கட்டமாக விடப்பட்டது. இதில் டிலாபியா, கேட்லா, காப் போன்ற இன மீன்குஞ்சுகள் இவ்வாறு விடப்பட்டன.

இதன் மூலம் சுமார் 50ற்கும் மேற்பட்ட நன்னீர் மீன்பிடிக் குடும்பங்கள் அவர்களது வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வுக்கு அமைச்சர் உட்பட அமைச்சின் அதிகாரிகள், நீர் வள அமைச்சின் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -