ஞானசார தேரரை மிஞ்சும் சுமனரத்ன தேரர்..!

அ அஹமட்-
மீராவோடை பாடசாலை காணி விவகாரத்தில் தமிழ் - முஸ்லிம் மக்களிடையே முரண்பாடு நிலவி வருகிறது. இந்நமுரண்பாட்டை தனக்கு மிகவும் சாதகமாக பயன்படுத்திய மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்னதேரர் முஸ்லிம்களுக்கு எதிராக மிகவும் கண்டிக்கத்தக்க வார்த்தை பிரயோகத்தை கையாண்டிருந்தார். இப்படியானகீழ்த்தரமான வார்த்தை பிரயோகத்தை ஞானசார தேரர் கூட பாவித்திருக்கவில்லை எனக் கூறினாலும் தவறாகாது.

குறித்த தேரர் ஞானசார தேரரின் நெருங்கிய சகாவாகும் என்பது யாவருக்கும் தெரியும். ஞானசார தேரர்அடக்கப்பட்டிருந்தாலும் அவரின் மூலம் நிகழ்த்தப்பட்ட இன வாத நிகழ்ச்சி நிரல்கள் டான் பிரசாத் மற்றும் இவ்வாறானதேரர்களால் முன்னெடுக்கப்படுகிறது. இதனை இவ்வரசு கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்க்கின்றது.

இது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை. இதில் இவர் மூக்கை நுழைக்க வேண்டியஅவசியமில்லை. அல்லது இவருக்கு அனைத்து பிரச்சினைகளின் போதும் தலையிட்டு தீர்வை பெற்றுக்கொடுக்கும்அதிகாரம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வரசு மறைமுகமாக இவ் அதிகாரத்தை வழங்கியிருந்தாலும்ஆச்சரியப்படுவதற்கில்லை. இந் நாட்டின் அதிகாரம் பௌத்த அடிப்படைவாதிகளின் கைகளில் படிப்படியாக சென்றுகொண்டிருப்பதை இதனூடாக அறிந்துகொள்ளலாம்.

குறித்த தேரர் பிரச்சினை எழுந்த இடத்தில் நீதி மன்ற உத்தரவை கிழித்து வீசியிருந்தார். இதற்கு முன்பும் ஒரு தடவைஅவர் நீதி மன்ற உத்தரவை கிழித்து வீசியிருந்தார். பௌத்த தேரர்களுக்கு நீதி மன்ற உத்தரவை கிழித்தெறியும்வகையிலான சட்டங்கள் ஏதேனும் உள்ளதா என்ற அச்சம் எழுகிறது. இவரின் செயற்பாடானது இலங்கை நீதிதுறையின்செயற்பாட்டை பலவீனப்படுத்துகிறது. இதுவெல்லாம் இலங்கை நாட்டுக்கு சிறந்ததல்ல.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -