மாட்டு கொட்டகையில் ஆணின் சடலம் மீட்பு..!

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-
ட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆணைத்தோட்டத்திலே (புலோரன்ஸ்) 21.08.2017 காலை சடலம் மீட்டகப்பட்டுள்ளது. தனது பிள்ளைகளினால் கைவிடப்பட்ட நிலையில் அநாதரவாக மட்டுகொட்டகையில் வாழ்ந்து வந்த 65. வயதுடடைய ஆர் ராமையா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மனைவி கொழும்பில் பணி புரிவதாகவும் இரண்டு மகன் மற்றும் மகள் ஒருவருமாக முவர் உள்ள நிலையில் இரண்டு மகன் மாரும் திருமணம் முடித்து தனியாக சென்றுள்ள நிலையில் மகள் விழிபுலனற்றவர் எனவும் தெரியவந்துள்ளது மூன்று பிள்ளைகளினதும் ஆதரவு அற்ற நிலையில் சில காலமாக மாடு வளர்ப்பு கொட்டகையிலே வாழ்ந்து வந்துள்ள நிலையில் கொட்டகைப்பகுதியில் துர்நாற்றம்வீசிய நிலையில் அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையிலே இறந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது 

சடலத்தை பிரேத பரிசோணைக்கு நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணையை அரம்பித்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -