அதாவுல்லாஹ்வின் மீள்வருகையின் வேகத்தால். கதிகலங்கி நிற்கும் முஸ்லிம் காங்கிரஸ்.

ஒலுவில் ஜெலில்-

தேசியப்பட்டியல் எம்பி அம்பாரை மாவட்டுத்துக்கு கொடுபடுமானால், அது அட்டாளைச்சேனைக்கே கொடுபடும், வேறு எந்த ஊருக்கும் கொடுபடாது. அதை எந்தக்கொம்பனாலும் தடுக்கவும் இயலாது என்று கூறி மக்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்த்து காரியத்தை கட்சிதமாய் சாதித்த அமைச்சர் ஹக்கீம்.

அதன் பிறகு கொடுத்த வாக்குறுதிகளை அனைத்தையும் மறந்து தனது அதிகாரத்தால் மக்களை திசை திருப்பி காலத்தை கடத்திக் கொண்டிருந்த சாணக்கியம். இன்று அந்த தேசிய பட்டியலை வேறு பிரதேசத்துக்கு தனக்கு நெருக்கமானவருக்கு கொடுக்க முயற்சித்துக் கொண்டிருப்பதும் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் இத்தருணத்தில்.

அதாவுல்லாஹ்வின் மீள்வருகையினால்
அட்டாளைச்சேனைக்கு தேசியப் பட்டியல் கட்டாயம் கொடுத்தாக வேண்டும் என்ற நிலையில் கட்சியின் தலைவர் அமைச்சர் ஹக்கிம் தவித்துக் கொண்டிருக்கிறார்.

"அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு"
எதையுமே ஒரு அளவோடுதான் செய்யவேண்டும் என்பதை இப்போது புரிந்திருக்கும் தலைவருக்கு?
அவ்வாறு தேசியப் பட்டியல் கானல் நீராகும் பட்சத்தில் குதிரையின் வேகம் கிழக்கில் இன்னும் அதிகரிக்க வாய்ப்புண்டு. ஏன் சில நேரம் மரத்தின் கிளைகள் கூட உடையக்கூடிய சந்தர்ப்பமும் உண்டு.

ஆகமொத்தத்தில் அதாவுல்லாஹ் வருகை கிழக்கு மக்களுக்கு. குறிப்பாக அம்பாறை மாவட்ட மக்களுக்கு புத்துயிர் கொடுத்து வருகிறது என்பது புரிகிறது.

ஆனாலும் முன்னால் அமைச்சர் அதாவுல்லாஹ் அவர்களின் அரசியல் முன்னெடுப்புகள் கடந்த காலத்தைப் போல் அதிரடி அரசியல் அல்லாமல். சற்று நிதானப் போக்கும் , எல்லா பிரதேசங்களையும் அரவணைத்துக் கொண்டு செல்லும் எண்ணமும் இருக்குமாயின். அவரின் எதிர்கால அரசியல் உயிரோட்டம் உள்ளதாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது என்று நினைக்கிறேன்.
அல்லாது பழய பல்லவியில் பயணித்தால் எல்லாம் புஸ்வானம் ஆகிவிடும் மக்கள் மத்தியில்.

அதே நேரம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிழக்கில் பாரிய சவால்களையும் எதிர்காலத்தில் எதிர்கொள்ள வேண்டி வரும் என்பதும் யதார்த்தமாகும்.

ஏனென்றால் கடந்த தேர்தலின் போது அவர்கள் கிழக்கில் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை பார்க்கிலும்.
அவர்களால் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் செய்த சேவைகள் என்றாலும் சரி , கொடுத்த தொழில்கள் என்றாலும் சரி குறைவே என்றே கூறலாம். இது சற்று கூடுதலான நெருக்கடியை கொடுக்கும் எதிர்காலத்தில் எனலாம்.

அது எப்படி என்று பார்ப்போமானால் ?

முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அதன் உண்மையான இலக்கை விட்டு பிழையான பாதையை நோக்கி வழிநடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது அதன் தலைமையால் என்று அறிந்து கொண்ட இளைஞர்கள், சமுக சிந்தனை வாதிகள், நலன் விரும்பிகள் மாற்றம் ஒன்று தேவை என்பதை உணர்ந்தார்கள்.

அந்த மாற்றம் முஸ்லிம் காங்கிரஸிக்கு நிகரான கட்சியை ஆதரிப்பதன் மூலமே தங்கள் மக்களின் பிரச்சினையை தீர்க முடியும் என்ற நிலைப்பாட்டிலும் இருந்தார்கள் உண்மையும் அதுவேதான்.

அவ்வேளையில் முன்னால் அமைச்சர் அதாவுல்லாஹ்வும் துரதிஸ்டவசமாக அரசியல் அதிகாரங்களை இழந்திருந்ததால் அங்கும் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணுவதற்கான எந்த சந்தர்ப்பமும் இருக்க வில்லை.

மாறாக அமைச்சர் றிசாத் பதியுதீனுடைய கட்சி சற்று பலமாக இருந்ததை மக்கள் உணர்ந்தார்கள்.
காரணம் வடக்கு மக்களின் மீள் குடியேற்றத்துக்கு உதவி செய்கிறார். இனவாதிகளை எதிர்த்து அந்த மக்களுக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகிறார், வெளிநாடுகளின் உதவியுடன் வீடுகளை அமைத்து கொடுக்கிறார். என்றெல்லாம் இருந்த போது.

" இக்கரைக்கு அக்கரை பச்சையாக தெரிந்தது "
அதனால்தான் அவர் சார்ந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க வேண்டிய அவசியமும் கிழக்கு மக்களுக்கு ஏற்பட்டது.
அது காலத்தின் தேவையாகவும் "கீரைக் கடைக்கும் எதிர்க்கடை தேவை" என்ற கருத்தும் இருந்தது.

அதன்படி சகோ றிசாத் சார்ந்த கட்சியை ஆதரித்து முதல் வரவே கனிசமான வாக்குகளைப் பெற்று. குறைந்த வித்தியாசத்தில் ஆசனத்தை இழந்தது அக்கட்சி.

ஆனாலும் முஸ்லிம் காங்கிரஸின் கோட்டைக்குள் ஓட்டையை ஏற்படுத்தியது என்பது இலகுவான விடயமல்ல. அந்த வகையில் கட்சிக்கு கிடைத்த முதல் வெற்றியாக கூறலாம்.
அத்தோடு மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்தார்கள் என்பதுதே இவ்விடத்தில் உறுதி செய்யப்பட்டது.

இதை பிழை என்று சொல்லுவதற்கும் இல்லை.ஜனநாயக முறைப்படி யாரையும் யாரும் ஆதரிக்கலாம் எம்பதே உண்மை.

அதனால் அந்த மக்களின் நோக்கம் பெரும்பாலும் அபிவிருத்தியை நோக்கமாக வைத்தே ஆதரவை கொடுத்தார்கள் அவர்களுக்கு. அது செயல் சார்ந்த அபிவிருத்தி, உரிமை சார்ந்த அபிவிருத்தி என்றுண்டு.

இப்படியான சூழ்நிலை இருந்த நிலையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் கட்சியின் உயர் மட்டத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் உச்ச கட்ட பதவிகளை கொடுத்து திருப்தி படுத்துவதும். வாக்கு போட்ட மக்களை கண்டுகொள்வது குறைவாக இருப்பதும். ஏதோ உயர்பீடத்தை மட்டுமே நம்பி கட்சி பயணிப்பது போன்று மக்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது.

அது மட்டுமா இவர்கள் மாற்றுக் கட்சியில் திடிரென தாவினால் கட்சியின் நிலை என்னவாகும்? என்ற பாரிய கேள்வியும் இளைஞர்கள் மத்தியில் இருப்பதும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டியவையாகும்.

இவ்வாறே இந்த நிலை தொடருமாக இருந்தால். எதிர்காலத்தில் கட்சி பாரிய நெருக்கடியை சந்திப்பதையும் யாராலும் தடுக்க முடியாது.

"இது தண்ணீருக்குள் நெருப்பை கொண்டு செல்லுவதைப் போன்றாகும்"

ஆகவே மக்களின் கருத்துப்படி அவர்கள் எதை எதிர்பார்த்து கட்சியை ஆதரித்தார்களோ. அது அவர்களுக்கு கிடைக்கவில்லை என்பதையே தெளிவாக புரிகிறது.
பொறுத்திருந்து பார்ப்போம் அமைச்சர் றிசாத் கிழக்கில் தொழில் வாய்ப்பு, அபிவிருத்தி என்று ஏற்படுத்தி கட்சியை நிலை நிறுத்துவாரா? இல்லை கட்சியின் உயர்மட்டத்தை மட்டும் திருப்தி படுத்தி கட்சியை குறிப்பிட்ட வட்டத்துக்குள் முடக்குவாரா என்பதை?

மறுபக்கத்தில் முன்னால் அமைச்சர் அதாவுல்லாஹ் கூட ஒரு சிறந்த ஆளுமையுள்ள பதவிகளுக்கும் பணத்துக்கும் சோரம் போகாத அனுபவமுள்ள அரசியல்வாதியாவர்.

பல அபிவிருத்திக்கு சொந்தக்காரர், பல இளைஞர்களின் வாழ்வில் ஒளி கொடுத்த புன்னியவாதி.

அது மட்டுமா "பாலை வனமாக இருந்த அக்கரைப்பற்றை சோலை வனமக்கி அந்த மக்களின் மனங்களின் வாழும் மன்னராவார்"
இப்படிப்பட்டவரின் மீள் வருகை தற்போது ஒரு வித்தியாச பாணியில் பயணிப்பதை காணமுடிகிறது.

உண்மையில் சகோ அதா ஒரு ஊரை மட்டும் இலக்காக வைக்காமல். எல்லா ஊரையும் சேர்த்து ஒருமித்து செயற்படுவாராக இருந்தால். எதிர்காலத்தில் பாரிய போட்டி அரசியல் நிகழக்கூடிய சாத்தியம் கிழக்கில் இருக்கிறது என்பதுதான் உண்மை.

எனவே எப்படிப்பட்ட வியூகங்களை வகுத்து மக்களின் ஆதரவை அதிகரிக்க போகிறார் அதாவுல்லாஹ் என்பதையும் பொறுத்திருந்தே பார்க்க முடியும்.

ஆகமொத்தத்தில் இந்த அரசியல்வாதிகாளால் மக்கள் நண்மை அடைவார்களா? இல்லை மக்களால் அரசியல்வாதிகள் நன்மை அடையப் பேகிறார்களா? என்பதை தீர்மானிக்கும் சக்தி மக்களின் (ஒற்றுமை) கைகளிலே தங்கியுள்ளது.

அரசியல் யாசகத்தை (பணம் ) கொடுப்பதையும் வாங்குவதையும் தடுத்து நிறுத்தினால் மட்டுமே சமூகம் வெற்றி அடைவார்கள். இல்லாவிட்டால் அரசியல்வாதிகள் பொய் முகமூடி அணிவதை யாராலும் தடுக்க முடியாது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -