மேற்படி சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. பெல்மதுளை தர்மாலோக்க மாகா வித்தியாலயத்தில் க.பொ.தர. உயர்தரத்தில் (கலைப்பிரிவு) கல்வி கற்று இம்முறை நடைபெற்று வரும் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய் எந்தானை கொடகும்புர பிரதேசத்தை சேர்ந்த கே.டபிள்யு.தீபிகா பியதர்ஷனி எனும் 19 வயதடைய மாணவியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி சம்பவம் குறித்த மேலும் தெரியவருவதாவது, கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை நேற்றுமுன்தினம் காலை வேலைக்கு சென்று விட்டு பகல் 2 மணியளவில் வீட்டுக்கு வந்தபோது பிள்ளை கழுத்து வெட்டப்பட்ட நிலையில வீட்டில் பலியாகி கிடந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. பலியான பிள்ளையின் தாய் இறந்து ஒரு வருடமும் ஒரு மாதமும் எனவும் மேலும் தெரியவந்துள்ளது.(வீரகேசரி)