உயர்தர பரீட்சை எழுதிய 19 வயது மாணவி வெட்டிக்கொலை

றக்­கு­வாணை பொலிஸ் பிரி­விற்­குட்­பட்ட எந்­தானை, கொட­கும்­புர பிர­தே­சத்தில் இம்­முறை க.பொ.த உயர்­த­ரத் தில் பரீட்­சைக்கு தோற்றிய மாணவி இனந்­தெ­ரி­யா­தோரால் வெட்டிக் கொலை செய்­யப்­பட்­டுள்ளார்.

மேற்­படி சம்­பவம் நேற்­றுமுன்தினம் இடம்­பெற்­றுள்­ளது. பெல்­ம­துளை தர்­மா­லோக்க மாகா வித்­தி­யா­ல­யத்தில் க.பொ.தர. உயர்­த­ரத்தில் (கலைப்­பி­ரிவு) கல்வி கற்று இம்­முறை நடை­பெற்று வரும் உயர்­தரப் பரீட்­சைக்கு தோற்றிய் எந்­தானை கொட­கும்­புர பிர­தே­சத்தை சேர்ந்த கே.டபிள்யு.தீபிகா பிய­தர்­ஷனி எனும் 19 வயதடைய மாண­வியே இவ்­வாறு கொலை செய்­யப்­பட்­டுள்ளார்.

மேற்­படி சம்­பவம் குறித்த மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, கொலை செய்­யப்­பட்ட மாண­வியின் தந்தை நேற்­று­முன்­தினம் காலை வேலைக்கு சென்று விட்டு பகல் 2 மணி­ய­ளவில் வீட்­டுக்கு வந்­த­போது பிள்ளை கழுத்து வெட்­டப்­பட்ட நிலை­யில வீட்டில் பலி­யாகி கிடந்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. பலி­யான பிள்­ளையின் தாய் இறந்து ஒரு வரு­டமும் ஒரு மாதமும் எனவும் மேலும் தெரி­ய­வந்­துள்­ளது.(வீரகேசரி)

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -