சீகிரிய தேசிய உணவு விற்பனை நிலையம் திறந்து வைப்பு





நோட்டன் பிரிட்ஜ்  மு.இராமச்சந்திரன்-


தேசிய உணவு நுகர்வின் ஊடாக அரோக்கியமான சமூகத்தினை உருவாக்கும் பொருட்டு" சீகிரிய தேசிய உணவு விற்பனை நிலையம் மத்திய மாகாண ஆளுனர் நிலூக்கா ஏக்கநாயக்கவினால் 11.07.2017 திறந்து வைக்கப்பட்டது .

தம்புள்ள மற்றும் சீகிரிய பிரதேசத்திற்கு வருகைத்தரும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி மாகாண விவசாய அமைச்சின் 35 லட்சம் ரூபா நிதி ஒதிக்கீட்டின் கீழ்
மத்திய மாகாண விவசாய திணைக்களத்தினால் சீகிரிய தேசிய உணவு விற்பனை நிலையம்" நிர்மாணிக்கப்பட்டது

மத்திய மாகாண விவசாய,சிறிய நீர்பாசன , விலங்கு உற்பத்தி மற்றும் அபிவிருத்தி, கமநல அபிவிருத்தி,நன்னீர் மீன் பிடி, தமிழ் கல்வி, இந்து கலாசாரம், மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் அழைப்பின் பேரில்
மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் விவசாய ராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹார அவர்களின் பங்குபற்றுதளுடன் இடம்பெற்ற
இந் நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் முதலைச்சின் செயலாளர், விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர்கள்திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் அமைச்சின் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -