மக்களின் பிரச்சினைகளை கிராமங்களுக்கு சென்று கேட்டறிந்து உரிய தீர்வுக்கு வழிகோலுங்கள்



அமைச்சரின் ஊடகப்பிரிவு-
திகாரிகளும், அலுவலர்;;களும் வெறுமனே அலுவலகத்தில் பணிபுரிந்தால் மட்டுமே போதுமென்ற மனோ நிலையை மாற்றி, மக்கள் பிரச்சினைகளுடன் நேரடித் தொடர்புபட்ட அரச ஊழியர்கள், அந்த மக்களைச் சந்தித்து பிரச்சினைகளை கேட்டறிந்து உரிய தீர்வை சரியாக வழங்க வேண்டுமென இன்று (03.07.2017)வன்னிமாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தின் போது அமைச்சரும், இணைத்தலைவருமான ரிஷாட்; பதியுதீன் அறிவுறுத்தினார்.

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வெலிஓயா பிரதேச செயலகத்தில் நடைபெற்ற போதே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சில அதிகாரிகளின் நடவடிக்கைகளை கடிந்து கொண்டார். கூட்டத்திற்கு சமூகமளிக்காத அதிகாரிகள் தொடர்பிலும் அவர் தனது கவனத்தை செலுத்தினார்.

'அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் மேற்கொள்ளப்படும் முடிவுகளை அமுல்படுத்த தயங்குகின்றீர்கள், அலட்சியப்படுத்துகின்றீர்க.; மக்கள் படுகின்ற அவஷ்தைகளை நீங்கள் கணக்கெடுக்காது, நினைத்த மாத்திரத்தில் வேலை செய்கின்றீர்கள்' இந்த நிலையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. என்று கூறிய அமைச்சர், தொடர்ந்தும் இவ்வாறு நீங்கள் நடந்து கொண்டால் உரிய நடவடிக்கை எடுப்போம் என்றார்.

மக்களுக்காகவே நீங்கள் பணிபுரிகின்றீர்கள். எனவே கிராமங்களுக்கு சென்று அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறியுங்கள். கிராமங்களிலுள்ள மத குருமார்கள், சமூக நல இயக்கங்கள், மாதர் அமைப்புக்கள் மற்றும் அபிவிருத்திச் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோரை தேவை ஏற்படின் அழைத்து கூட்டங்களை நடத்துங்கள். அவர்களின் கருத்துக்களையும், பிரச்சினைகளையும் கேட்டறியுங்கள். உரிய பிரச்சினைகளை அடையாளப்படுத்துங்கள். தேவைகள் குறித்த விபரங்களை பிரதேச செயலாளரிடம் அறிக்கையாக சமாப்;பியுங்கள் இதனைவிடுத்து நீங்கள் இங்கு ஒரு தீர்மானம் எடுக்கின்றீர்கள், மக்களுக்கு உங்கள் தீர்மானங்கள் தெரிவிதில்லை. இதன் மூலம் பாதிக்கப்படுபவர்கள் அப்பாவி மக்களே இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

அடுத்தாண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு இப்போதே நீங்கள் தயாராக வேண்டும். இதன் மூலமே நாட்டின் அபிவிருத்திக்கு உரிய பங்களிப்பை வழங்கமுடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மாகாண சபை உறுப்பினர் ஜெயதிலக்க , வெலிஓயா பிரதேசசபை செயலாளர் சி. பி. வாசல உட்பட அதிகாரிகள், சமூக நல இயக்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -