அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை-சேறுநுவர பொலிஸ் பிரிவிற்குற்பட்ட அரியமாங்கேணி பகுதியைச்சேர்ந்த வயோதிபர் வீட்டுக்கு பின் புறமாகவுள்ள தோட்டப்பயிர்ச்செய்கைக்கு காவலுக்கு சென்ற போது யானை தாக்கி படுகாயமடைந்த நிலையில் நேற்றிரவு (13) 9.45மணியளவில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் சேறுநுவர- அரியமாங்கேணி பகுதியைச்சேர்ந்த எஸ்.வேலாயுதம் (70வயது) எனவும் தெரியவருகின்றது. குறித்த வயோதிபர் வீட்டுக்கு பின்புறமாகவுள்ள காணிக்குள் தோட்டம் செய்துள்ளதாகவும் அங்கு காவலுக்காக சென்ற போதே காட்டு யானையின் தாக்குதலினால் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் மூதூர் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை சேறுநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.