திருகோணமலை : யானை தாக்கி வயோதிபர் மரணம்

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை-சேறுநுவர பொலிஸ் பிரிவிற்குற்பட்ட அரியமாங்கேணி பகுதியைச்சேர்ந்த வயோதிபர் வீட்டுக்கு பின் புறமாகவுள்ள தோட்டப்பயிர்ச்செய்கைக்கு காவலுக்கு சென்ற போது யானை தாக்கி படுகாயமடைந்த நிலையில் நேற்றிரவு (13) 9.45மணியளவில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் சேறுநுவர- அரியமாங்கேணி பகுதியைச்சேர்ந்த எஸ்.வேலாயுதம் (70வயது) எனவும் தெரியவருகின்றது. குறித்த வயோதிபர் வீட்டுக்கு பின்புறமாகவுள்ள காணிக்குள் தோட்டம் செய்துள்ளதாகவும் அங்கு காவலுக்காக சென்ற போதே காட்டு யானையின் தாக்குதலினால் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் மூதூர் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை சேறுநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -