சேருவில நீர்வழங்கல் திட்டம் மக்களிடம் கையளித்தலும் நடமாடும் சேவையும்..!

ஹஸ்பர் ஏ ஹலீம்-
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் சேருவில பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சமுதாயம் சார் அமைப்புக்களிடமிருந்து பொறுப்பேற்கப்பட்ட நீர்வழங்கல் திட்டத்தினை ஒருங்கிணைந்த நீர்வழங்கல் திட்டமாக மாற்றப்பட்டு பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு வைபவரீதியாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் றவூப் ஹக்கீமினால் நாளை மறுதினம் (15) பொதுமக்களிடம் மாலை 04.00 மணிக்கு கையளிக்கப்படவுள்ளது.

இத்திட்டம் உள்ளூர் வங்கிகளின் நிதியுதவியூடாக 808.5 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டதுடன் இதனூடாக 3500 நீரிணைப்புக்கள் வழங்கப்படவுள்ளது.அன்றைய தினம் அமைச்சர் தலைமையில் திருகோணமலை பிராந்திய காரியாலயத்தில் குடி நீர் பிரச்சினைகள் தொடர்பாக பொதுமக்களுக்கான நடமாடும் சேவையும் காலை 09.00 மணி முதல் இடம்பெறவுள்ளதாகவும் நீர்வழங்கல் சபை பொதுமக்களுக்கு ஏற்கனவே அறிவித்துள்ளது.

இவ் வைபவத்தில் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் கிழக்குமாகாண ஆளுனர் ரோஹித போகல்லாகம முதலமைச்சர் நஸீர் அஹமட் பிரதியமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் உயரதிகாரிகள் எனப் பலரும் பங்கேற்கவுள்ளனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -