நோட்டன் பிரிட்ஜ் மு.இராமச்சந்திரன்-
தேயிலை தொழிற்சாலை அதிகரிகளுக்கும் தொழிற்சாலையில் பணி புரியும் தொழிலாளர்களுக்கும் பதக்கம் அணிவிக்கப்பட்டு சன்றிதழ் வழங்கும் நிகழ்வு வனராஜா குருப் முகாமையாளர் குசல் வீரசூரிய தலைமையில் 11.07.2017 வனராஜா தேயிலை தொழிற்சாலையில் நடைபெற்றது
பொகவந்தலா பெருந்தோட்ட கம்பனீயில் 25 வது ஆண்டை முன்னிட்டும் 2016 ம் ஆண்டு தேசிய சந்தையில் வனராஜா தேயிலை தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் தேயிலை தூள்
சிறந்த தேயிலைக்கான அங்கிகாரத்தை பெற்றதையிட்டு தொழிற்சாலையில் பணிபுரியும் 10 அதிகாரிகளுக்கும் 85 தொழிலாளர்களுக்கும் பதக்கங்கள் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்
நிகழ்வில் வனராஜா குரூப் உதவி முகாமையாளர் தோட்ட அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்