க.கிஷாந்தன்-
வெலிமடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிமடை பதுளை பிரதான வீதியில் புகுல்பொல பிரதேச பாலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தி செயற்திட்ட பணியில் ஈடுப்பட்டிருந்த பாரவூர்தி ஒன்று உமாஓயாவிலிருந்து வெலிமடை நகரத்திற்கு செல்லும் வழியில் வீதியை விட்டு விலகி பாலத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்து 11.07.2017 அன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக வெலிமடை பொலிஸார் தெரிவித்தனர். பாரவூர்தியின் சாரதி மது அருந்தியிருந்ததனாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், விபத்தினால் பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதனால் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



