எம்.எம்.ஜபீர்-
சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையும், பரிசோதனையும் இன்று (12) பொலிஸ் நிலைய மைதானத்தில் இடம்பெற்றது. சவளக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.எம்.நஜீப் தலைமையில் நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையில் அம்பாரை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சமந்த விஜயசேகர கலந்துகொண்டு அணிவகுப்பில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.
இதன்போது பொலிஸ் உத்தியோகத்தர்களின் உடைகள், விடுதிகள், என்பவற்றை பார்வையிட்டதுடன் பொலிஸ் நிலையத்திலுள்ள வாகனங்களின் நிலையையும் பரிசோதனை மேற்கொண்டார்.