'பிளாஸ்டிக் அரிசி, சந்தைக்கு வந்திருப்பதாகச் சொல்வது முற்றிலும் புரளிக் கதை. 2011-ஆம் ஆண்டு வியட்நாமிய இணையப் பத்திரிகை ஒன்றுதான் முதன்முதலில் பிளாஸ்டிக் அரிசி சந்தைக்கு வந்திருப்பதாகவும், அது சீனாவில் உற்பத்தி செய்யப்படுவதாகவும் செய்தி வெளியிட்டது. அதன்பின்னர், பிளாஸ்டிக் அரிசி குறித்து வெளிவந்த செய்திகள் அனைத்துமே வியட்நாமிய இணையப் பத்திரிகை வெளியிட்ட செய்தியைச் சார்ந்தே இருந்தன'.
கேள்வி: இதுபற்றிச் சற்று விளக்கமாகச் சொல்ல முடியுமா?
சீனாவில் வுச்சாங் என்னும் இடத்தில் விளையும் அரிசி மிகப் பிரபல்யமானது. இது நல்ல சுவையும் மணமும் கொண்டது. இந்த அரிசி அவியும்போது வெளிவரும் வாசனை, பசியைத் தூண்டும் என்றும் சொல்லப்படுகிறது. வுச்சாங் அரிசி விலையானதால் வியாபாரிகள் கலப்படம் செய்வதாகவும் இதனுடன் பிளாஸ்ரிக்கால் செய்யப்பட்ட போலி அரிசியை கலப்பதகவும் வியட்நாமிய இணையப் பத்திரிகை தெரிவித்தது.
இந்த கலப்பட அரிசியானது உருளைக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு போன்ற மாச்சத்துள்ள கிழங்குகளை அரைத்து அரிசி போன்று செய்யப்படுவதாகவும் அதற்கு இரசாயனங்களைப் பூசி அவை விற்கப்படுவதாகவும், சீனாவின் புகழ்பெற்ற 'வுச்சாங்' ரக அரிசியைப் போன்ற தோற்றமளிக்க இந்தக் கலப்பட ரக அரிசிகளில் வாசனைத்திரவங்கள் தெளிக்கப்படுவதாகவும் பின்னர் மேலும் பல செய்திகள் வெளிவந்தன. ஆனால் எந்த செய்தியிலும் நேரடியாக பிளாஸ்டிக் கலக்கப் பட்டதாகத் தகவல்கள் இல்லை.
பிளாஸ்டிக்கை அரைத்து அரிசிகளின் அச்சுகளாக மாற்றுவதன் மூலம் எந்தவொரு வணிகலாபமும் பெற்றுவிட முடியாது. கலப்படம் செய்யப்படுவது இலாப நோக்கத்திற்காக மட்டும்தான். ஒரு கிலோ அரிசியைவிட ஒரு கிலோ பிளாஸ்டிக்கின் விலை அதிகம் என்பதால் வியாபாரி இதில் எந்தவித இலாபத்தையும் பெறமுடியாது. அதுமட்டுமல்ல அரிசியில் பிளாஸ்டிக்கை கலந்தால் உலை கொதிக்கும்போது அல்லது அரிசி அவியும்போது பிளாஸ்டிக் உருகிவிடும்.
நாம் உண்ணும் பலவிதமான உணவுகளில் கலப்படம் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. சில துரித உணவுகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும், குறித்த வடிவம் பெறுவதற்கும், கெட்டுப்போகாமல் இருப்பதற்கும் நெகிழ்வுத் தன்மையுள்ள சில இரசாயனப்பொருட்கள் கலக்கப்படுகின்றன என்பது உண்மையே. ஆனால், ஒட்டுமொத்தமாக பிளாஸ்டிக்கைக் கொண்டு வாளி, கோப்பை கதிரை, மேசை செய்வது போல, அரிசி தயாரிப்பது சாத்தியமில்லை.
கேள்வி: ஐரோப்பிய நாடுகளில் திடீர் நூடில்ஸ் போன்று திடீர் அரிசிப் பைகள் விற்கப்படுகின்றன. அந்த அரிசிப்பையை கொதி தண்ணீரில் போட்டால் சில நிமிடங்களுக்குள் பைக்குள் இருக்கும் அரிசி அவிந்து சோறாகிவிடும். இது எந்தவகை அரிசி?
இது இயற்கையான அரிசி அல்ல. சரியாகச் சொன்னால் இது ‘நூடில்ஸ்-அரிசி’. நெல்லை அரிசியாக்கும் போது பெருமளவு குருணை வரும். இதை விற்க முடியாது. இதை அரைத்து பசையுள்ள சில மா வகைகளைச் சேர்த்து நூடில்ஸ் போன்று அரிசி தயாரிக்கிறார்கள். இதிலும் பிளாஸ்டிக் சேர்ப்பதில்லை. இந்த அரிசியின் விலை இயற்கை அரிசியிலும் பலமடங்கு அதிகம். இது அவசர உலகத்தில் வாழும் சிலருக்கு அவ்வப்போது உதவலாம். ஆனால் அன்றாடம் அரிசி உணவு சாப்பிடுபவர்களுக்கு தோதுப்படாது.
கேள்வி: சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையங்களிலெல்லாம் பிளாஸ்டிக் அரிசியினால் சமைக்கப்பட்ட சோறு எனக் காட்டி, அதனை உருண்டையாக்கி, நிலத்தில் அடித்துக் காண்பிக்கிறார்களே, அதுபற்றி உங்கள் கருத்தென்ன?
அரிசியில் இயற்கையாகவே அமைலோஸ் (இனிப்புத்தன்மை), அமைலோஸ்-பெக்ரின் (பசைத்தன்மை) என்ற இரண்டு இரசாயனப் பொருள்கள் உண்டு. இவற்றின் அளவுக்கேற்றபடியே அரிசியின் தன்மை மாறுபடும். இந்தியர்களுக்கு உதிர்ந்த சோறு வேண்டும். குச்சிகளால் சாப்பிடும் சீனர்களுக்கு பசைத் தன்மையுள்ள சோறு வேண்டும். இதனால் ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் ஸ்டிக்கி ரைஸ் எனப்படும் இயல்பிலேயே ஒட்டும் தன்மையுடைய அரிசி வகைகள் பயிரிடப்படுகின்றன. இந்தவகை அரிசியில் அமைலோஸ்-பெக்ரின் கூடுதலாக இருப்பதால், அதன் கஞ்சியில் நெகிழ்வுத் தன்மையும் பசைத்தன்மையும் அதிகம் இருக்கும். இதனால்தான் நம்மவர்கள் இதை போஸ்டர் ஒட்டப் பாவிப்பதுண்டு. இந்த வகை ஸ்டிக்கி ரைஸை சூடாக இருக்கும் போதே இறுக்கமாக அமத்தி உருண்டையாகப் பிடித்தால் அவை உடையாத, உரமான, உருண்டையாக மாறும். பசைத் தன்மையுள்ள அரிசிமாவில் செய்யப்பட்ட பிடி கொழுக்கட்டையை நிலத்தில் எறிந்து பாருங்கள் அது உடையாதல்லவா? அது மாதிரித்தான் இதுவும்.
இதேவேளை நான் இன்னுமொன்றையும் சொல்லவேண்டும். இந்த மாதிரியான செய்திகளை வலைத்தளங்களில் பதிவேற்றுகையில், ஆதாரமும், உண்மைத் தன்மையும் தெரிந்தால் மட்டுமே பகிரவேண்டும். இதுகுறித்த வீடியோக்கள் பெரும்பாலும் புரியாத மொழிகளிலேயே முதலில் வெளிவந்தன. இன்றுவரையும் நிரூபிக்கப்படாத இந்தச் செய்திகள் அனைவரையும் அச்சுறுத்தும் வதந்திகளாகவே பல மொழிகளில் பரவிவருகின்றன. அறிவு பூர்வமாக நிரூபிக்கப்படாத வரையில் இதுபோன்ற செய்திகளை மக்கள் நம்பாமல் இருக்க வேண்டும், என நீண்டதொரு விளக்கம் தந்தார் பேராசிரியர் ஆசி கந்தராஜா.
நாம் உண்ணும் பலவிதமான உணவுகளில் கலப்படம் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. சில துரித உணவுகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும், குறித்த வடிவம் பெறுவதற்கும், கெட்டுப்போகாமல் இருப்பதற்கும் நெகிழ்வுத் தன்மையுள்ள சில இரசாயனப்பொருட்கள் கலக்கப்படுகின்றன என்பது உண்மையே. ஆனால், ஒட்டுமொத்தமாக பிளாஸ்டிக்கைக் கொண்டு வாளி, கோப்பை கதிரை, மேசை செய்வது போல, அரிசி தயாரிப்பது சாத்தியமில்லை.
கேள்வி: ஐரோப்பிய நாடுகளில் திடீர் நூடில்ஸ் போன்று திடீர் அரிசிப் பைகள் விற்கப்படுகின்றன. அந்த அரிசிப்பையை கொதி தண்ணீரில் போட்டால் சில நிமிடங்களுக்குள் பைக்குள் இருக்கும் அரிசி அவிந்து சோறாகிவிடும். இது எந்தவகை அரிசி?
இது இயற்கையான அரிசி அல்ல. சரியாகச் சொன்னால் இது ‘நூடில்ஸ்-அரிசி’. நெல்லை அரிசியாக்கும் போது பெருமளவு குருணை வரும். இதை விற்க முடியாது. இதை அரைத்து பசையுள்ள சில மா வகைகளைச் சேர்த்து நூடில்ஸ் போன்று அரிசி தயாரிக்கிறார்கள். இதிலும் பிளாஸ்டிக் சேர்ப்பதில்லை. இந்த அரிசியின் விலை இயற்கை அரிசியிலும் பலமடங்கு அதிகம். இது அவசர உலகத்தில் வாழும் சிலருக்கு அவ்வப்போது உதவலாம். ஆனால் அன்றாடம் அரிசி உணவு சாப்பிடுபவர்களுக்கு தோதுப்படாது.
கேள்வி: சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையங்களிலெல்லாம் பிளாஸ்டிக் அரிசியினால் சமைக்கப்பட்ட சோறு எனக் காட்டி, அதனை உருண்டையாக்கி, நிலத்தில் அடித்துக் காண்பிக்கிறார்களே, அதுபற்றி உங்கள் கருத்தென்ன?
அரிசியில் இயற்கையாகவே அமைலோஸ் (இனிப்புத்தன்மை), அமைலோஸ்-பெக்ரின் (பசைத்தன்மை) என்ற இரண்டு இரசாயனப் பொருள்கள் உண்டு. இவற்றின் அளவுக்கேற்றபடியே அரிசியின் தன்மை மாறுபடும். இந்தியர்களுக்கு உதிர்ந்த சோறு வேண்டும். குச்சிகளால் சாப்பிடும் சீனர்களுக்கு பசைத் தன்மையுள்ள சோறு வேண்டும். இதனால் ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் ஸ்டிக்கி ரைஸ் எனப்படும் இயல்பிலேயே ஒட்டும் தன்மையுடைய அரிசி வகைகள் பயிரிடப்படுகின்றன. இந்தவகை அரிசியில் அமைலோஸ்-பெக்ரின் கூடுதலாக இருப்பதால், அதன் கஞ்சியில் நெகிழ்வுத் தன்மையும் பசைத்தன்மையும் அதிகம் இருக்கும். இதனால்தான் நம்மவர்கள் இதை போஸ்டர் ஒட்டப் பாவிப்பதுண்டு. இந்த வகை ஸ்டிக்கி ரைஸை சூடாக இருக்கும் போதே இறுக்கமாக அமத்தி உருண்டையாகப் பிடித்தால் அவை உடையாத, உரமான, உருண்டையாக மாறும். பசைத் தன்மையுள்ள அரிசிமாவில் செய்யப்பட்ட பிடி கொழுக்கட்டையை நிலத்தில் எறிந்து பாருங்கள் அது உடையாதல்லவா? அது மாதிரித்தான் இதுவும்.
இதேவேளை நான் இன்னுமொன்றையும் சொல்லவேண்டும். இந்த மாதிரியான செய்திகளை வலைத்தளங்களில் பதிவேற்றுகையில், ஆதாரமும், உண்மைத் தன்மையும் தெரிந்தால் மட்டுமே பகிரவேண்டும். இதுகுறித்த வீடியோக்கள் பெரும்பாலும் புரியாத மொழிகளிலேயே முதலில் வெளிவந்தன. இன்றுவரையும் நிரூபிக்கப்படாத இந்தச் செய்திகள் அனைவரையும் அச்சுறுத்தும் வதந்திகளாகவே பல மொழிகளில் பரவிவருகின்றன. அறிவு பூர்வமாக நிரூபிக்கப்படாத வரையில் இதுபோன்ற செய்திகளை மக்கள் நம்பாமல் இருக்க வேண்டும், என நீண்டதொரு விளக்கம் தந்தார் பேராசிரியர் ஆசி கந்தராஜா.