எம்.வை.அமீர் -
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீனின் ஆலோசனைக்கு அமைவாக, அதன் பிரதித் தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமாகிய கலாநிதி ஏ.எம்.ஜெமீலின், வறிய மக்களுக்கான 1000ம் இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்குதல்என்னும் திட்டத்திற்கமைவாக 2017-07-02 ஆம் திகதி பாலமுனையில் 125 பேருக்கு இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்கும் திட்டம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாலமுனை அமைப்பாளர் வி.எம்.ஹுசைர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு இத்திட்டத்தின் ஏற்பாட்டாளரான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் பிரதம அதிதியாக கலந்துகொண்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.
ஏற்கனவே முதலாம் மற்றும் இரண்டாம் கட்டமாக சாய்ந்தமருது மாளிகைக்காடு மக்களை பிரதினித்துவப்படுத்தி 500 பேருக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டது அதேவேளை எதிர்வரும் சனிக்கிழமை ஒலுவில்மக்களுக்காக இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.