பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீகீன் பெருநாள் வாழ்த்துச் செய்தி

ஏ.எஸ்.எம்.தாணீஸ் -

ஸ்லாத்தில் கடமையாக்கப்பட்ட 05 கடமைகளில் ஒன்றான புனித நோன்புக் கடமையினை மிகவும் தியாகத்துடன் நிறைவேற்றி அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி தியாகத் திருநாளான புனித நோன்புப் பெருநாளினை கொண்டாடும் உலக இஸ்லாமியர்கள் அணைவருக்கும் இந்நாள் சகல சௌபாக்கியங்களையும் வழங்க வேண்டுமென அல்லாஹ்வினை பிரார்த்தனை செய்வதோடு,புனித வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் எம்.எஸ்.தௌபீக் தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இத்தினம் சகல இன மக்களுடனும் ஐக்கியத்தையும்,அமைதியையும்,இன சௌஜன்னியத்தையும், நிம்மதியையும் ஏற்படுத்தும் இனிய பெருநாள் தினமாக அமைய வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக் கொள்வதாகவும் அவ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பல்லின சமூகம் வாழும் இந்நாட்டில் கடந்த ரமழானைப் போன்று இந்த ரமழானிலும் முஸ்லிம்களை அச்சமூட்டும் செயற்பாடுகளும் அச்சுறுத்தல்களும் இடம்பெற்றதைக் காணக்கூடியதாக இருந்தன முஸ்லிம்களின் மதஸ்தலங்களின் மீதான தாக்குதல்கள்,வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்கள் என தொடர்ச்சியாக முஸ்லிம் சமூகத்தைய அச்சமூட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன அவைகள் உடனடியாக நிறுத்தப்பட்டு சகல இனக்குழுமங்களும் ஒற்றுமையாகவும்,சகோதர வாஞ்சையுடனும் வாழ்வதற்கான சூழலை இந்நாட்டின் ஜனாதிபதி,பிரதமர் உறுதிப்படுத்த வேண்டுமெனவும் அவரது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சி காலத்தில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளினாலேயே முஸ்லிம்கள் நல்லாட்சி அரசாங்கத்திக்கு தமது ஆதரவினை வழங்கினர்.ஆனால் இந்த ஆட்சியிலும் இனவாதிகள் சுதந்திரமாக இனவாதக் கருத்துக்களை கக்கிய வண்ணம் வலம் வருவது ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது இந்த நல்லாட்சியை சீர்குலைக்க சதிகார சக்திகள் முன்னெடுக்கும் திட்டங்கள் என்றால் சட்டத்தையும் ஒழுங்கையும் பேணும் பொலிஸார் இனவாதிகள் மீது நெகிழ்வுப் போக்கை கடைபிடிக்காமல் தராதரம் பாராது சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அவ்வாறில்லாமல் இனவாதத்தை முன்னெடுப்போர் மீது நெகிழ்வுப் போக்கு கடைபிடிக்கப்படுமேயானால் அதன் மூலம் இந்த அரசாங்கம்,காவற்துறை மற்றும் நீதித்துறை மீது மக்களின் நம்பிக்கை அற்றுப் போகும் நிலையே உருவாகும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனவே முஸ்லிம்களை இலக்குவைத்து முன்னெடுக்கப்படும் இனவாத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து முஸ்லிம்கள் சுதந்திரமாகவும்,நிம்மதியாவும் தமது மத சுதந்திரத்தையும், மார்க்கக் கடமைகளையும் முன்னெடுப்பதற்கான சூழலை இந்த அரசாங்கம் உருவாக்க வேண்டும் என இப்பெருநாள் தின வாழ்த்துச்செய்தியில் கேட்டுக் கொள்வதாக பாராளுமன்ற மேலும் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -