பன்சேனையில் குடிசையிலிருந்து வயோதிபரின் சடலம் மீட்பு..!

ஏ.எச்.ஏ.ஹுஸைன்-
ட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் நெடுஞ்சேனை கிராமத்திலுள்ள குடிசை ஒன்றிலிருந்து திங்கட்கிழமை 12.06.2017 பகல் வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நெடுஞ்சேனையைச் சேர்ந்த 06 பிள்ளைகளின் தந்தையான காளிக்குட்டி பொன்னுத்துரை (வயது 68) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தானும் கணவரும் ஒன்றாக வசித்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மனைவி அருகிலுள்ள மகளின் வீட்டுக்கு சென்று மீண்டும் வீடு திரும்புகையில் கணவன் உயிர் பிரிந்து சடலமாகக் காணப்பட்டதாக மனைவி தெரிவித்துள்ளார். சடலம் உடற் கூற்றுப் பரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -