போக்குவரத்து பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி கைது -பொறளையில் சம்பவம்

ழ­மை­வாய்ந்த இடி­தாங்கி கொள்ளை விவ­கா­ரத்­துடன் சம்­பந்­தப்­பட்­டி­ருப்­ப­தாக கூறப்­படும் விவ­கா­ரத்தில் பொரளை பொலிஸ் நிலைய போக்­கு­வ­ரத்து பிரிவின் பொறுப்­ப­தி­காரி நேற்று வெள்ளிக் கிழமை கைதுசெய்­யப்­பட்­டுள்ளார்.

கைது­செய்­யப்­பட்ட பொலிஸ் பொறுப்­ப­தி­காரி கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்­றத்தில் நேற்று ஆஜர்­ப­டுத்­தப்­பட்­ட­தை­ய­டுத்து அவரை எதிர்­வரும் 7 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது. அத்­துடன் எதிர்­வரும் 7 ஆம் திகதி அவரை அடை­யாள அணி­வ­குப்­புக்கும் உட்படுத்துமாறும் நீதி­மன்றம் பணிப்­புரை விடுத்­துள்­ளது.

இத­னை­விட இந்த கொள்ளை சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டை­ய­தாக கூறப்­படும் நால்­வரை பொலிசார் கைது செய்­தி­ருந்த நிலையில் அவர்­களை எதிர்­வரும் 16 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

300 வரு­டங்கள் பழ­மை­யான வி.ஓ.சி இலச்­சி­னை­யு­டைய புரா­தன பெறு­ம­தி­மிக்­கது என நம்­பப்­படும் இடி­தாங்கி ஒன்­றினை 14 கோடி ரூபா­வுக்கு கொள்­வ­னவு செய்­வது போன்று நாட­க­மாடி அந்த இடி­தாங்கி கொள்­ளை­யி­டப்­பட்­டி­ருந்­தது. கொழும்பு கரு­வாத்­தோட்டம் பௌத்­தா­லோக்க மாவத்­தை­யி­லுள்ள வீடொன்­றுக்கு பொலிஸ் சீருடை தரித்த நப­ரொ­ரு­வ­ருடன் வந்த கொள்ளை குழு இந்த கொள்ளைச் சம்­ப­வத்தை அரங்­கேற்­றி­யி­ருந்­தது.

இது தொடர்பில் விசா­ர­ணை­களை ஆரம்­பித்த கொழும்பு தெற்கு சட்­டத்தை அமுல் செய்யும் பொலிஸ் குழு கிரு­ளப்­பனை பகு­தியில் பாழ­டைந்த வீடொன்­றி­லி­ருந்து 4 சந்­தேக நபர்­களை கைது செய்­தி­ருந்­தனர்.

இந்த இடி­தாங்­கியை விற்­பனை செய்ய வந்­த­தாக கூறப்­படும் மாகா­ண­சபை உறுப்­பினர் ஒருவர் கொள்ளை இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் வீட்­டுக்கு வெளியே இருந்­த­போது ஆயு­த­மு­னையில் கொள்ளை இடம்­பெற்­ற­தாக பொலி­சா­ருக்கு வழங்­கப்­பட்­டுள்ள முறைப்­பாட்டில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் கொள்ளை குழுவில் பொலிஸ் சீருடை தரித்த ஒருவர் இருந்­துள்­ள­மையை குறித்த மாகா­ண­சபை உறுப்­பி­னரே பொலி­சா­ருக்கு தெரிவித்துள்ளார். குறித்த புரா­தன இடி­தாங்­கி­யா­னது அம்­மா­காண சபை உறுப்­பினர் உள்­ளிட்ட குழு­வி­னா­லேயே விற்­பனை செய்ய முயற்­சிக்­கப்­பட்­டுள்­ளதாகவும் கூறப்படுகிறது.

பொலிஸ் சீரு­டையில் இருந்த நபர் பொரளை பொலிஸ் நிலை­யத்தின் போக்­கு­வ­ரத்து பிரிவின் அதி­கா­ரி­யென பின்னர் விசா­ர­ணையின் மூலம் தெரி­ய­வந்­த­தை­ய­டுத்தே அவர் நேற்று நீதி­மன்றில் சர­ண­டைந்­துள்ளார்.

இதனையடுத்தே அவரை எதிர்வரும் 7 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம். அன்றைய தினம் குறித்த பொலிஸ் பரிசோதகரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளது.(வீ)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -