ரமழான் முடிந்த பின்...

அருள் மறை மீண்டும்
அலுமாரி மேல் உறங்கும்
இருள் நேரத் தொழுகை
இல்லாது மறைந்து போகும்

சூரியன் உதித்த பின்
சுபஹுகள் அரங்கேறும்
பேரிச்சம் பழ போத்தல்
பிரியா விடை பெறும்

மோதினும் ஹஸ்ரத்தும்
முன் சfப்பில் சில பேரும்
ஏதோ தொழுவார்கள்
இல்லை அடுத்தவர்கள்

முப்பது நாள் தாடி
முழுதாக சேவ் ஆகும்
அப்புறம் வீண் விரயம்
அதிரும் பட்டாசால்

ஏழு மணி நாடகம்
எழும்பி உட்காரும்
மாலை நேர திக்ருகள்
மறந்து பறந்து போகும்

இன்பொக்ஸ் ஹாய் சொல்லல்
இன்பமாய்த் தொடங்கும்
அன்பென்று தொடங்கி
ஆபாசம் அரங்கேறும்

மக்காவை ரசித்த கண்கள்
மலையாளப் படத்தில் வரும்
அக்காவை ரசிக்கும்
ஆரும் இல்லா வேளையிலே

எவ்வாறு நோன்பிருந்தார்
இவர் தக்வா பெற்றாரா
ஷவ்வால் வந்த பின்னால்
சங்கதி புரிய வரும்

இப்படிச் செய்யாமல்
இறைவனைப் பயந்தவர்கள்
எப்போதும் பக்தியுடன்
இருப்பார் சிறப்பார்.

Mohamed Nizous

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -