ஷியா முஸ்லிம் பிரிவினருடைய இஸ்லாமிய கல்வி கலாச்சார நிலையமானது (Islamic Education Cultural Center) நிலையமானது பொதுமக்களால் அடித்து உடைக்கப்பட்ட சம்பவம் மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா, ஓட்டமாவடி மீராவோடை ஆலிம் வீதியில் நேற்று 08.062017 இஸா தொழுகைக்கு பின்னர் இடம் பெற்றது.
கல்குடா பிரதேசத்தில் அதிகரித்து வருகின்ற ஷியா முஸ்லிம்களின் ஆதிக்கம் காரணமாகவும், குறித்த பிரதேசத்தில் இயங்கிவருகின்ற இஸ்லாமிய கல்வி கலாஸ்சார நிலையமானது இஸ்லாமிய அகீதாவிற்கு முரண்பாடான முறையில் கொள்கையினை பரப்பி வருகின்றமையும், இந்த ரமழான் மாதத்தில் தேவைக்கு அதிகமான ஒலி பெருக்கிகள் பாவிக்கப்படுவதும், இன்று வெள்ளிக்கிழமை 09.06.2017 குறித்த நிலையத்தில் புதிதாக ஜும்மா தொழுகை இடம் பெறவுள்ளமையுமே நிலையம் உடைக்கப்பட்டமைக்கு முக்கிய காரணம் என பரவலாக பேசப்படுகின்றது.
மேலும் குறித்த விடயம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுனவின் தலைமையில் சம்பவம் இடம் பெற்ற இடத்திற்கு உடனே சமூகமளித்த பொலீஸ் குழுவினரும், புலனாய்வு பிரிவினரும் விசாரனைகளை ஆரம்பித்துள்ள அதே நேரத்தில். கல்குடா பிரதேசத்தில் ஷியா முஸ்லிம் பிரிவினரின் இன்னுமொரு முக்கிய தளமாக காணப்படுகின்ற மீராவோடை மன்பஹுல் ஹுதா அறபு கல்லூரிக்கும் மேலதீக பாதுகாப்பு உடனே வழங்கபட்டு பொலீசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட மூவர், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாதவும்
மேலும், தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட மூவர், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாதவும்
உடைப்பு சம்பவம் இடம் பெற்றதற்கு இஸ்லாமிய கல்வி கலாச்சார நிலையத்தின் தற்போதைய நிலவரம் சம்பந்தமான காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.