குடிநீர் கோரி போராடிய மக்கள் மீது தாக்குதல் நடாத்திய பிரிகேடியர் கைது



ரத்துபஸ்வல பிரதேசத்தில், குடிநீர் கோரிப் போராடிய பிரதேசவாசிகள் மீது தாக்குதல் நடத்த ஆணை பிறப்பித்ததாகக் குறிப்பிடப்படும் இராணுவ உயரதிகாரியான பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்தன, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டார்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில், வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக, குற்றப்புலனாய்வுப் பிரிவுக்குச் சென்றிருந்த போதே, அவர் கைது செய்யப்பட்டதாகவும் அவரை, கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

மேற்படி விவகாரம் தொடர்பில், இராணுவத்தைச் சேர்ந்த நால்வர், ஏற்கெனவே கைதாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -