நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சினால் மேற்கோள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைத் திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேர மாற்றம் தொடர்பான அறிவித்தல். நாளை (20.05.2017) சனிக்கிழமை நடைபெறவிருந்த பாலமுனை, காங்கேயனோடை, செல்வா நகர் கிழக்கு சிறுவர் பூங்காக்களின் திறப்பு விழா நிகழ்வும் பாலமுனை நடுவோடை கடற்கரை அழகுபடுத்தல் திறப்பு விழா நிகழ்வும் நாளை மறுதினம் (21.05.2017) ஞாயிற்றுக்கிழமை காலை8.00 மணி தொடக்கம் 10.00 மணி வரை நடைபெற நேரமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் ஹக்கீம் அவர்களுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்குமிடையிலான முக்கிய சந்திப்பு நாளை சனிக்கிழமை (20.05.2017) காலை நடைபெறவுள்ளதால் மேற்படி நிகழ்வுகள் நேரமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
யு.எல்.எம்.என்.முபீன்,
இணைப்புச்செயலாளர்,
நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சு.
