பைஷல் இஸ்மாயில்-
கிழக்கு மாகாணத்திலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கடமையாற்றிய ஊழியர்களில் இருந்து மர்த்தணர் பதவிக்காக தெரிவு செய்யப்பட்ட 21 மர்த்தணர்களுக்கான பயிற்சி நெறி கடந்த 2 மாதங்களாக திருகோணமலையிலும், நாவின்ன பாரம்பரிய வைத்திய துறைக்கான தேசிய நிறுவனத்தில் இடம்பெற்றது.
இதன் ஒரு அங்கமான ஆயுர்வேத மூலிகைப் பயிற்சி நெறியின் வெளிக்கள சுற்று இன்று (16) மர்த்தணர் பயிற்சி நெறியின் இணைப்பாளர் வைத்தியர் வி.எம்.றிசாட் தலைமையில் ஹல்த்துமுல்ல மூலிகைத் தோட்டத்துக்கு விஜயத்தை மேற்கொண்டு மூலிகை பற்றிய விளக்கத்தினை வைத்தியர் எஸ்.ஆர்.பொல்ட்டன் ரஜீவினால் வழங்கி வைப்பதையும், அருகில் வைத்தியர் எம்.ஏ.முர்சலின் ஆகியோர் நிற்பதையும் படங்களில் காணலாம்.

