ஹம்ஸா கலீல்-
காத்தான்குடி பிரதேசத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோய் காரணமாக அதிகமான நோயாளர்கள் காத்தான்குடி தள வைத்தியசாலையில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அதன் காரணமாக வைத்தியசாலையில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு நிலவுகின்றது.
இதனை கருத்திற் கொண்டும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள உறவுகளோடு கைகோர்க்கும் வகையிலும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்வினால் காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு முதற்கட்டமாக அவசர தேவையுடைய மருந்துப் பொருட்கள் சில கடந்த 24.03.2017 வெள்ளிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டிருந்தது. அதன் இரண்டாம் கட்டமாக மற்றுமொரு தொகுதி மருந்துப் பொருட்கள் 29.03.2017 புதன்கிழமை வழங்கப்பட்டது.
குறித்த மருந்துப்பொருட்களை காத்தான்குடி தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் Dr. எம்.எஸ்.எம் ஜாபிர் அவர்களிடம் ஶ்ரீலங்கா ஹிறா பௌண்டேசன் உறுப்பினர்கள் கையளித்தனர்.