சப்னி அஹமட்-
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் 40மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட திருகோணமலை சம்பூர் வைத்தியசாலை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டு எதிர்வரும் மாதம் 07ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால ஶ்ரீசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதாத அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு மூன்று மாவட்டங்களிலும் சரியான முறையில் தங்களது சுகாதார சேவைகளை செய்து வருகின்றது அதிலும் விசேடமாக இன மொழி வேறுபாடுகளுக்கு அப்பாலே எமது சேவையை மேற்கொண்டு வருகின்றோம் அதில் இவ்வாறு மக்களின் பிரச்சினைகளை கருத்திற்கொண்டே வைத்தியசாலைகளை அமைத்து வருகின்றோம்.
குறிப்பாக இப்பிரதேச மக்கள் தங்களது வைத்திய சேவைகளை பெற்றுக்கொள்வதில் அதிக கஷ்டத்தை எதிர்நோக்கி வந்தார்கள் அம்மக்களின் நிலமைகளை கருத்திற்கொண்டே இவ் வைத்தியசாலையை நாம் புதிய கட்டிடங்கள் ஊடாகவும், புதிய சுகாதார வாசதிகள் ஊடகாவும் , சிறந்து வழங்களைக்கொண்டும் அபிவிருத்தி செய்துள்ளதுடன் மாவட்ட வைத்தியசாலை எனும் நல்ல தரத்திற்கு நாம் அப்பிரதேச மக்களை கருத்திற்கொண்டு உயர்த்தியுள்ளோம். எனவும் அவர் தெரிவித்தார்.

இவ்விஜயத்தின் போது. மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், சுகாதார அமைச்சின் உதவி செயலாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்,திட்டமிடல் பொருப்பாளர் உள்ளிட்ட சுகாதார முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.