பாறுக் ஷிஹான்
மாலியில் ஐநா படையில் இணைந்துகொள்ளவுள்ள இலங்கை அணிக்கான பாரிய கள ஒத்திகை காங்கேசன்துறையிலிருந்து ஆரம்பமாகியுள்ளது.காங்கேசன்துறையில் ஆரம்பமாகிய இந்த களப்பயிற்சியில், 15 அதிகாரிகள் மற்றும் 185 படையினர், 82இற்கும் அதிகமான இராணுவ வாகனங்களுடன் பங்கேற்றுள்ளனர்.
ஐநா அமைதிப்படையில் இடம்பெறுவதற்கேற்ற வகையில் இராணுவ வாகனங்களுக்கு வெள்ளை வர்ணம் தீட்டப்பட்டு ஐநா கொடியுடன் குறித்த வாகனத் தொடரணி இடம்பெற்றது. இலங்கை படையினரும் ஐ.நா சின்னத்துடன் கூடிய தலைக்கவசங்கள் மற்றும் பட்டிகளையும் அணிந்துள்ளனர்.
காங்கேசன்துறையில் இருந்து புறப்பட்ட இந்த நீண்ட இராணுவ வாகனத் தொடரணியின் பயணம் நாவலடி, விடத்தல்தீவு, ஓயாமடு, மின்னெரியா, புத்தளம், மாதுறு ஓயா, புத்தல, வழியாக சூரியவெவவில் நிறைவடையும்.