காங்கேசன்துறையில் ஐநாவின் வாகனத் தொடரணி (Photos)

பாறுக் ஷிஹான்
மாலியில் ஐநா படையில் இணைந்துகொள்ளவுள்ள இலங்கை அணிக்கான பாரிய கள ஒத்திகை காங்கேசன்துறையிலிருந்து ஆரம்பமாகியுள்ளது.காங்கேசன்துறையில் ஆரம்பமாகிய இந்த களப்பயிற்சியில், 15 அதிகாரிகள் மற்றும் 185 படையினர், 82இற்கும் அதிகமான இராணுவ வாகனங்களுடன் பங்கேற்றுள்ளனர்.

ஐநா அமைதிப்படையில் இடம்பெறுவதற்கேற்ற வகையில் இராணுவ வாகனங்களுக்கு வெள்ளை வர்ணம் தீட்டப்பட்டு ஐநா கொடியுடன் குறித்த வாகனத் தொடரணி இடம்பெற்றது. இலங்கை படையினரும் ஐ.நா சின்னத்துடன் கூடிய தலைக்கவசங்கள் மற்றும் பட்டிகளையும் அணிந்துள்ளனர்.

காங்கேசன்துறையில் இருந்து புறப்பட்ட இந்த நீண்ட இராணுவ வாகனத் தொடரணியின் பயணம் நாவலடி, விடத்தல்தீவு, ஓயாமடு, மின்னெரியா, புத்தளம், மாதுறு ஓயா, புத்தல, வழியாக சூரியவெவவில் நிறைவடையும்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -