கட்சி செயலாளர்களுடன் விசேட சந்திப்பை நடாத்தும் தேர்தல்கள் ஆணையாளர்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையில் இன்று (29) முக்கிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவிருக்கின்றது. 

இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் செயலகத்திலேயே இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்படுகின்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல், பதவிக்காலம் நிறைவடையவிருக்கின்ற மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படும் என்று தேர்தல்கள் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. 

அதேபோல, வாக்காளர் இடாப்புச் சீர்திருத்தம், தேர்தல்கள் தொடர்பிலான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதேவேளை, இந்தச் சந்திப்புக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் இதர உறுப்பினர்கள் மற்றும்; அதிகாரிகளும் தேர்தல்கள் கண்காணிப்புக் குழுக்களின் உறுப்பினர்களும் அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் அறியமுடிகின்றது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -