க.கிஷாந்தன்-
உடப்புஸ்ஸல்லாவ ரப்பான தோட்டத்திற்கு மரண வீடொன்றிற்கு சென்றுக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்று 28.03.2017 அன்று இரவு ரப்பான தோட்ட பாலத்திற்கு அருகில் வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் இவ் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் உடப்புஸ்ஸல்லாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மஸ்பன்ன திம்புலன பகுதியை சேர்ந்த 61 வயதுடைய நபர் ஒருவர் இவ் விபத்தில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் உடப்புஸ்ஸல்லாவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை உடப்புஸ்ஸல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.