கிண்ணியாவில் தொடரும் டெங்கு வேட்டை


ஹஸ்பர் ஏ ஹலீம் -

கிண்ணியாவில் டெங்கு மரணங்கள் அதிகரித்த வண்ணமே உள்ளமையைக் கருத்திற் கொண்டு இளைஞர்களிற் 13 ஆவது நாளாக களப்பணியில் இறங்கியுள்ளதுடன் இன்று(13) கிண்ணியா டொக்டர் ஹில்மி பிரன்சிப் பார்க்கில் விசேட கலந்துரையாடலொன்றும் மாலை இடம்பெற்றது.இதில் கிண்ணியா முகநூல் இளைஞர்கள் பலரும் பங்கேற்றனர்.

அடுத்த கட்ட நடவடிக்கைகள் இதன்போது ஆராயப்பட்டதுடன் தீவிரமாக களப் பணியில் இளைஞர்களைக் கொண்டு டெங்குவின் தாக்கத்தை குறைக்க பல்வேறுபட்ட அபிப்பிராயங்களும் ஆலோசனைகளும் இங்கு முன்வைக்கப்பட்டன இதனூடான தாக்கங்களை விரைவாக குறைக்க எதிர்காலத்திட்டமிடல் கட்டாயமாக இங்கு பேணப்படவேண்டியதொன்றாக அமையவேண்டுமென முடிவுகள் இதன்போது எட்டப்பட்டன.

குறிப்பாக இச்சந்திப்பில் நலன் விரும்பிகள் புத்திஜீவிகள் ஆசிரியர்கள் சட்டத்தரணி உட்பட பலதரப்பட்ட சமூக அக்கறை கொண்ட விசேடமாக இளைஞர்களும் பங்கேற்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -