திருகோணமலையில் விபத்து - ஒருவர் பலி

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை- ஹொரவ்பொத்தானை பிரதான வீதி யான் ஓயா சந்திக்கருகில் இன்று (10) மாலை 6.10 மணியளவில் வேகமாக வந்து கொண்டிருந்த காருடன் குறுக்கே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் உயிரிழந்துள்ளதாக ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் கஹடகஸ்திகிலிய. கேதேவ. மஸ்ஸல்லாவ பகுதியைச்சேர்ந்த சின்னாகே தஸநாயக்க (55வயது) எனவும் தெரியவருகின்றது.

விபத்து தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்தவரின் சடலம் ஹொரவ்பொத்தானை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்ட்டுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -