அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை மொறவெவ பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட புளியங்குளம் பகுதியிலுள்ள விவசாயக்காணியை பெற்றுத்தருமாறு கோரி ரொட்டவெவ விவசாய சங்கம் ஜனாதிபதிக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளதாக விவசாய சங்கத்தின் தலைவர் ஏ.எஸ.எம்.பைசர் தெரிவித்துள்ளார்.
கடந்த யுத்த காலத்திற்கு முன்னர் ரொட்டவெவ விவசாய மக்கள் செய்து வந்த இவ்விவசாயக்காணியை வனப்பாதுகாப்பு அதிகாரிகள் வனப்பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான காணி என தெரிவித்து விவசாயத்திணை செய்ய விடாமல் தடுப்பதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய காலகட்டத்தில் நல்லாட்சி அரசாங்கத்தில் சந்தோஷமாக வாழ்ந்து வரும் காலப்பகுதிக்குள் தாங்கள் மேற்கொண்டு வந்த இந்த விவசாயக்காணியை விவசாயத்தினை மேற்கொள்ள பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ககுறிப்பிடப்பட்டுள்ளதாகவும் விவசாய சங்கத்தின் தலைவர் ஏ.எஸ்.எம்.பைசர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் இதன் பிரதிகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் அனுப்பி வைத்துள்ளதாகவும் காணிகளை கூடிய விரைவில் பெற்றுத்தந்து விவசாய மக்களின் நலனில் அக்கறையுடன் செயற்பட வேண்டுகொள் விடுப்பதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.