அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவர்கள் வரலாற்றுச் சாதனை..!

எம்.ஏ.றமீஸ்-
ம்முறை வெளியான கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின்படி அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் மூன்று மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ஏ தரச் சித்தி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர் என கல்லூரியின் அதிபர் ஏ.எல்.கமறுதீன் தெரிவித்தார்.

இப்பரீட்சையில் தோற்றிய மாணவர்களின் 98 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் கல்விப் பொதுத்தராதரப் பத்திர உயர் தர பிரிவில் கல்வி கற்க தகுதி பெற்றுள்ளனர்.

இதற்கமைவாக இம்முறை பரீட்சைக்குத் தோற்றிய எப்.ஹப்லல், எம்.எஸ்.சக்கி மற்றும் எம்.எச்.சியாறா ஆகிய மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ஏ தரச் சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இது தவிர இப்பரீட்சைக்குத் தோற்றிய 10 மாணவர்கள் 8 ஏ, பி சித்தியினையும் பெற்று பாடசாலைக்கு பெருமை தேடிக் கொடுத்துள்ளனர். அத்துடன் இப்பரீட்சைக்குத் தோற்றிய அதிகப்படியான மாணவர்கள் பல பாடங்களிலும் நூறு வீத சித்தியினைப் பெற்றுள்ளதுடன் இம்முறை உயர்தர வகுப்புகளில் கணித மற்றும் விஞ்ஞானப் பிரிவுகளில் கல்வி கற்க அதிமான மாணவர்கள் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள், மாணவர்களை வழிப்படுத்திய ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலைச் சமூகத்தினர் போன்றோருக்கு தமது நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக அதிபர் கமறுதீன் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -