காரைதீவில் 12மாணவர்களுக்கு 9ஏ சித்திகள்.!

காரைதீவு நிருபர் சகா-
காரைதீவுக்கோட்டத்தில் இம்முறை வெளியான க.பொ.த.சா.த. தரப்பரீட்சை பெறுபேற்றினடிப்படையில் 12மாணவர்கள் 9ஏ சித்தி பெற்றுள்ளனர்.

விபுலானந்தாவில் 6பேர்!

காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் 06மாணவர்கள் 9ஏ சித்திபெற்றிருப்பதாக அதிபர் தி.வித்யாராஜன் தெரிவித்தார்.
சிவஞானசீலன் லோகரமணன் சகாதேவராஜா யனோஜ் சண்முகநாதன் தனோஜன் நகுலேஸ்வரன் பிருந்தாபன் ஜெகநாதன் மதுசகன் சிவலிங்கம் லோஜிதன் ஆகியோரே 9ஏ பெற்ற மாணவர்களாவர்.

பெண்கள் பாடசாலையில் 5பேர்!

காரைதீவு இ.கி.மி. பெண்கள் பாடசாலையில் 05மாணவிகள் 9ஏ சித்திபெற்றிருப்பதாக அதிபர் செ.மணிமாறன் தெரிவித்தார்.
பேரின்பநாதன் பேணுசா இராஜேஸ்வரன் ஹம்சாயினி ஜெயநாதன் கம்ஜிகா ரவீந்திரன் முகூர்த்தனா தேவானந்தன் கிசானி ஆகியோரே 9ஏ பெற்ற மாணவிகளாவர்.

சண்முகாவில் ஒரு மாணவன்!

காரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் மகேந்திரன் டிசாந்த் என்ற மாணவன் 9ஏ சித்திபெற்றிருப்பதாக அதிபர் இரா.ரகுபதி தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -