எம்.எம்.ஜபீர்-
சம்மாந்துறை அல்-அர்சத் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி சம்மாந்துறை அல்-அர்சத் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஏ.எல்.ஏ.மஜூட் தலைமையில் இன்று பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர், சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம், சம்மாந்துறை பள்ளிவாசல் பிரதம நம்பிகையாளர் சபை தலைவர் ஏ.முஸ்தபா, சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலக உதவிக்கல்வி பணிப்பாளர் ஏ.முஸ்தாக் அலி, சம்மாந்துறை கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.ஏ.சபூர் தம்பி, சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர் கே.எம்.எஸ்.நஜாஸ், பாடசாலைகளின் அதிபர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள்,பொது மக்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இவ்விளையாட்டுப் போட்டியில் சபா இல்லம் 292 புள்ளியை பெற்று முதலாமிடத்தையும், ஹிரா இல்லம் 254 புள்ளியை பெற்று இரண்டாம் இடத்தையும், மர்பா இல்லம் 219 புள்ளியை பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.
இதன்போது கலாச்சார அலுவல்கள் அமைச்சினால் கடந்த வருடம் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு தேசிய ரீதியாக நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சியில் அல்-அர்சத் மகா வித்தியாலயத்தின் விசேட தேவையுடைய கல்வி பிரிவில் கல்வி கற்கும் மாணவர்கள் கிராமிய நாடக போட்டியில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைபெற்றமைக்கு மாணவர்களுக்கு அதிதிகளினால் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.