மனித நேயமற்ற பிரதியமைச்சர் ஒருவரின் செயலாளர்

பிரதி அமைச்சரின் செயலாளர் ஒருவர் தனது 83 வயதான தாயை நடுவீதியில் விட்டு சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த வயோதிப தாயை பன்னிபிட்டிய, மொரகெட்டிய பிரதேசத்தில் கைவிட்டுச் சென்றதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த பௌர்ணமி தினத்தன்று இரவு, தனது மூத்த மகன் தன்னை கைவிட்டு சென்றதாக 83 வயதுடைய தாயார் ஒருவர் கொட்டாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். மூன்று பிள்ளைகளுக்கு தாயான அவர் பல கஷ்டங்களுக்கு மத்தியில் பிள்ளைகளை வளர்த்தததாகவும், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இரண்டு மகன்மார்களும் பொலிஸ் நிலைத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -