மருதமுனை அல்-மதீனா வித்தியாலயத்தில் தரம் 06 இல் கல்வி கற்கும் மாணவி பாத்திமா ஹம்தா சீனத் சமீம், ஒரு வருடத்திற்கான தினகரன் பத்திரிகையை தனது பாடசாலைக்கு அன்பளிப்பு செய்ய முன்வந்துள்ளார்.
தானும் சக மாணவர்களும் பயன்பெறும் வகையில், பத்திரிகை வாசிப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் நோக்குடன், தான் கற்கும் பாடசாலைக்காக இவ்விடயத்தை செய்ய முன்வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதற்காக தினமும் பெற்றோர் தனக்கு பாடசாலை உணவுக்காக வழங்கும் பணத்திலிருந்து ரூபா 20 இனை ஒதுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் அதிபர் ஏ.ஆர். நிஃமத்துல்லாவிடம், பாத்திமா ஹம்தா சீனத் சமீம், தினகரன் பத்திரிகையின் பிரதியொன்றை கையளித்தார்.
தினகரன் பத்திரிகை அண்மையில் தனது 85 வருட பூர்த்தியை நிறைவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -