கைவரிசையை காட்டிய இளைஞனை காட்டிக்கொடுத்த சீ.சீ.டீ.வீ - கைது

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-
ட்டன் நகரிலுள்ள தொலைத்தொடர்பு நிலையமொன்றில் திருட்டுத்தனமாக தன்னியக்க மீள் நிறப்பு இயந்திரத்தில் தனது கைபேசிக்கு மீள் நிரப்பிய ஒருவரை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த தொலை தொடர்பு நிலையத்தின் 19.03.2017 இரவு 8.55 பணியாளர்கள்சில நிமிடங்கள் வெளியில் சென்றிருந்த வேலையில் அவ்விடம் வந்த இளைஞன் ஒருவன் தன்னியக்க மீள் நிரப்பு இயந்திரத்தில் தனது கைபேசிக்கு 500 ருபா மீள் நிரப்பிய கானொளி வர்த்த நிலையத்தில்பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டீ வி கமராவில் பதிவாகியிருந்தது.

சம்பவம் தொடர்பில் தொலைத்தொடர்பு நிலைய உரிமையாளரினால் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் 20.03.2017 இரவு 8 மணியளவில் அதே தொலைத்தொடர்பு நிலையத்திற்கு வருகைத்தந்த குறித்த இளைஞன் தொடர்பில் சந்தேகம் கொண்ட உரிமையாளர் உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன் விசாரணைகளை பொலிஸார்முன்னெடுத்து வருகின்றனர்.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -