பாறுக் ஷிஹான்-
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 153 ஆவது பொலிஸ் வீரர் தின நிகழ்வுகள் இன்று(21) யாழ் பொலிஸ் நிலையத்தில் யாழ் மாவட்ட உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.ஏச். அம்பியபிட்டிய தலைமையில் நினைவு கூறப்பட்டது.
இதன் போது கடந்த காலத்தில் உயிர்நீத்த பொலிஸ் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் ஆகியோர்களின் உறவினர்களால் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இங்கு கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.ஏச். அம்பியபிட்டிய கடந்த காலத்தில் யாழ் மாவட்டத்தில் 3010 பேர்கள் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் உயிர் இழந்துள்ளனர்.இந்த உயிரிழப்புக்கள் அனைத்தும் கடந்த 30 வருடகாலத்திலே நடைபெற்றது என சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் யாழ் பொலிஸ் நிலையத்தின் உதவி பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் அதிகாரிகள் உத்தியோகர்கள் மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.