சீன பிரதிநிதிகளுடன் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சந்திப்பு..!

லங்கை வந்துள்ள சீனா செங்டு மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகளை இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் சந்தித்து கலந்துரையாடிய புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாணத்தில் முதலீடுகள் செய்வது உள்ளிட்ட முக்கிய விடயங்கள் சம்பந்தமாக இதன்போது பேச்சு நடத்தினார். 

இலங்கை வந்துள்ள சீனா செங்டு மக்கள் காங்கிரஸ் கட்சியின் நிலையியற் குழு உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றத்துக்கு விஜயம் செய்து அங்கு பல்வேறு தரப்புக்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர். இதன்போது, இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுடன் அக்கட்சியின் பிரதித்தலைவர் Ao Xigui தலைமையிலான குழு சந்தித்தது. 

இதன் போது, தொழில்நுட்ப உதவிகளை இலங்கைக்கு வழங்குவது தொடர்பாகவும், கிழக்கு மாகாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வது சம்பந்தமாகவும் விசேட கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -