மூதூர் கிழக்கு மாணவர்களுக்கு அடிப்படை ஆங்கிலக் கல்வி பயிற்சி..!

மூதூர் கிழக் குமாணவர்களுக்கு அடிப்படை ஆங்கிலக் கல்வி பயிற்சிஆரம்ப நிகழ்வு பள்ளிக்குடியிருப்பு இந்து கல்லூரியில் பிப்ரவரி 5 ம் திகதி நடைபெற்றது. பள்ளிக்குடியிருப்பு இந்து கல்லூரி அதிபர் - திரு கிருஷ்ணதாஸ் அனைவரையும் வரவேற்றார் திருகோணமலை ரோட்டரி கழக தலைவர் - திரு ச சிவசங்கர் தனது தலைமை உரையின்போது இந்த திட்டத்தின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்து, இந்த திட்டம் நான்கு மாதங்களுக்கு ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற இருப்பதால் மாணவர்கள் தவறாமல் கலந்து பலன் பெற வேண்டுமென்று என்று அவர்களின் பெற்றோர்களை வேண்டி கொண்டார்.

ஐம்பது மாணவர்கள் இந்த ஆங்கில கல்வி. பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டனர் இந்த ஆங்கிலகல்வி. பயிற்சி ஆசிரியர் றோட்டேரியன் போரம் வேலைத்திட்டத்தை விளக்கினார்.. றோட்டேரியன் திருமுகம் ஒவ்வொரு வாரம் தவறாமல் தங்கள் குழந்தைகளை அனுப்ப பெற்றோர்களை வேண்டி கொண்டார். மற்றும் அவர்களின் எதிர்காலஈத்துக்கு ஆங்கில அறிவு எவ்வளவு முக்கியம் என்பதை விளக்கினார், சுவிற்சர்லாந்தை சேர்ந்த Arlesheim ரோட்டரி கிளப் இருந்து நிதிகளை பெறுவதற்காக முக்கிய காரணமாக இருந்த றோட்டேரியன் லொட்டீ (Rtn.Lotte) கூட்டத்தில் உரையாற்றினார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -