மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் பிரதமருடன் அமீா் அலி அவசர சந்திப்பு..!

எம்.ரீ.எம்.பாரிஸ்-
ட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்தொடர்பிலும் அவா்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்கும்நோக்கில் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க அவா்களை பிரதியமைச்சா் எம்.எஸ்.எஸ். அமீா் அலி இன்று (24) நேரில் அவசர சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டிருத்தார்.

இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் இச்சந்திப்பு பிரதமர் ரணில் விக்கிரம சிங்கஅவா்களின் இல்லத்தில் இடம் பெற்றது.

இச்சந்திப்பின் போது பிரதியமைச்சா் எம்.எஸ்.எஸ். அமீா் அலி மட்டக்களப்பு மாவட்டத்தில்நான்கு நாட்களாக சத்தியாக்கிரகப் போராட்டத்தினை தொடர்ந்து வரும் வேலையற்றபட்டதாரிகள் விடயம் தொடர்பில் அவசர நிரந்தர தீர்வினை பெற்று தருமாறு பிரதமரிடம்வேண்டுகோள்விடுத்தார்.

இவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்திய பிரதமர் எதிர் வரும் நாட்களில் இதற்கான உரியதீர்வினை பெற்று தருவதாக பிரதியமைச்சா் அமீா் அலி அவா்களுக்கு நம்பிக்கைதெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அடுத்த கட்ட பேச்சு வாத்தை ஒன்று ஒர் இரு நாட்களில் இடம்பெறவுள்ளதாகவும் பிரதியமைச்சா் மேலும் கருத்து தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அரசாங்கத்திடம் பேச்சு வார்த்தை ஒன்றினை நடாத்தி மட்டக்களப்புமாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் கவனம்செலுத்துமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துரைரட்னம் அவா்களும் பிரதியமைச்சரிடம்வேண்டுகோள் விடுத்திருத்தமை குறிப்பிடத்தக்கது.

இச்சந்திப்பு தொடர்பாக பிரதியமைச்சா் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துரைரட்னம்அவா்களுக்கும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவா் ரீ.கிஸ்காந்அவா்களுக்கும் தொலை பேசியில் இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளதாகவும்இவ்வேலையற்ற பட்டதாரிகளின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வினை பெற்று கொடுப்பதற்குதம்மால் முடியுமான முழு முயற்சிகளையும் மேற்கொண்டு வருதாகவும் பிரதியமைச்சா்எம்.எஸ்.எஸ். அமீா் அலி நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -