ஹஸ்பர் ஏ ஹலீம்-
ஊடகவியலாளர்களுக்கான விழிப்புணர்வூட்டும் உளவளத்துணை நிகழ்வு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு திருகோணமலை மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சின் உளவளத்துணைப் பிரிவும் மாவட்டச் செயலகமும் இணைந்து நடத்தும் இந்த நிகழ்வு 'ஊடகப் பாவனையும் உளவியல் பாதிப்பும்' என்ற தலைப்பில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களைக் கலந்துகொள்ளுமாறு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 3ஆம் திகதிக்கு முன்னர்; 0778926338 அலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு தாங்கள் கலந்துகொள்வதை உறுதிப்படுத்திப்படுத்துமாறு மேலதிக மாவட்டச் செயலாளர் கூறியுள்ளார்.
