பாவனையாளர் அதிகார சபையின் சுற்றி வளைப்பு தொடர்கின்றது.

அமைச்சின் ஊடகப் பிரிவு-

நாட்டின் வர்த்தக நிலையங்களை நுகர்வோர் அதிகார சபை நேற்றும் 22 நடாத்திய தேடுதல் நடவடிக்கைகளில் முறைகேடான விற்பனைகளில் ஈடுபட்ட 106 வர்த்தகர்கள் அகப்பட்டுள்ளனர்.

கொழும்பு – 13, கம்பஹா – 8, களுத்துறை – 5, பதுளை – 3, புத்தளம் – 6, காலி – 5, ஹம்பாந்தோட்டை- 4, மாத்தளை – 5, நுவரெலியா – 6, கண்டி – 12, மட்டக்களப்பு -6, திருகோணமலை- 4, அம்பாறை – 4, பொலநறுவை – 3, அநுராதபுரம் – 11, கேகாலை -7 என 106 வர்த்தகர்கள் அகப்பட்டதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை அரிசியை விலை கூட்டி விற்ற 54 வர்த்தகர்களும் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -