தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்த பிரபலங்களில் அனைவராலும் விரும்பப்பட்டவர்கள் சினேகா, பிரசன்னா. இவர்களுக்கு விஹான் என்ற மகனும் இருக்கிறார். திருமணம், குழந்தை என சினிமாவில் இருந்து விலகி இருந்த சினேகா தற்போது மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார், பிரசன்னாவும் தற்போது டோலிவுட்டிலும் அறிமுகமாகி பிஸியாகி விட்டார்.
ஆனால் பிரசன்னாவிற்கோ தயாரிப்பில் ஈடுபட வேண்டும் என்பது ஆசை. தயாரிப்பாளர்கள் தற்போது படும்பாட்டை பார்த்த சினேகா தயாரிப்பு எல்லாம் வேண்டாம் என்று கூறினாராம். இதனால் இருவருக்குள்ளும் பிரச்சனை என கூறப்படுகிறது.