பாறுக் ஷிஹான்-
நாவற்குழியில் குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கு வீடமை ப்புத்திட்டம் அமைத்து கொடுக்கப்படவுள்ளதாக தேசிய வீடமைப்பு அபி விருத்தி அதிகார சபையின் யாழ் மாவட்ட முகாமையாளர் எம்.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
2017ம் ஆண்டிற்கான மிகப்பெரிய திட்டமாக நாவற்குழி பிரதேசத்தில் 250 வீடுகளைக் கொண்ட மாதிரிக் கிராமம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. நாவற்குழி பிரதேசத்தில் குடியேறியுள்ள 200 தமிழ் குடும்பங்கள் 50 சிங்களக் குடும்பங்களுக்கான வீடுகள் அமைக்கப்பட்வுள்ளன.
வீடொன்றிற்கு சுமார் 5 இலட்சம் ரூபா செலவிடப்படுவதுடன் குறித்த மாதிரிக் கிராமத்திலே அனைத்து வீடுகளும் அமைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.