ஸ்ரீலங்கா தொஹீத் ஜமாத் மருதமுனை கிளை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள 'உதிரம் கொடுப்போம் உயிர்களைக்காப்போம்'என்ற தொனிப்பொருளிலான இரத்தான நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை(22-01-2017)மருதமுனை மசூர்மௌலானா வீதியில் அமைந்துள்ள கிளை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த இரத்தான நிகழ்வில் இரத்தம் வழங்கத் தகுதியான ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டு இரத்தம் தானம் செய்ய முடியும்.இங்கு பாதுகாப்புப் படைகளைச்சேர்ந்த உத்தியோகத்தர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.இளைஞர் மற்றும் யுவதிகளும் கலந்து கொண்டு இரத்ததானம் செய்ய வருமாறு ஸ்ரீலங்கா தொஹீத் ஜமாத் மருதமுனை கிளை அன்புடன் அழைப்பு விடுக்கின்றது.