எல்லை நிர்ணய குழுவின் அறிக்கையை பொறுப்பேற்பதை சம்பந்தப்பட்ட அமைச்சர் தொடர்ந்தும் புறக்கணிப்பாராயின் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக பெப்ரல் அமைப்பு அறிவித்துள்ளது.
பல்வேறு காரணங்களை முன்வைத்து அறிக்கையைப் பொறுப்பேற்பதை தாமதப்படுத்துவாராயின் தேர்தலை விரைவாக நடாத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் கேட்டுக் கொள்வதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சட்ட மா அதிபரிடம் ஆலோசித்து தேவையான நடவடிக்கைகளைத் திட்டமிடுமாறும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரைக் கேட்டுக் கொள்வதாகவும் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹண ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.