நேபாளத்திலிருந்து வந்த சுற்றுலா பயணிகளின் பஸ் கொத்மலையில் விபத்து -18 பிக்குகள் வைத்தியசாலையில்


நேபாளத்திலிருந்து வந்த சுற்றுலா பயணிகளின் பஸ் ஒன்று விபத்திற்குள்ளானதில் 18 பேர் காயமடைந்து கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

நேற்று (04) பிற்பகல் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கொத்மலை மகாவலிசாய விகாரையை தரிசித்துவிட்டு கம்பளை நோக்கிச் செல்லும் போது கொத்மலை அணைக்கட்டு பிரதேசத்தில், பஸ் பாதையை விட்டு விலகிச் சென்று மரத்தில் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த பஸ்ஸில் சுற்றுலா பயணிகள் 23 பேரும் சாரதி ஒருவரும் பஸ் நடத்துனர் ஒருவருமாக 25 பேர் இருந்துள்ளனர்.

காயமடைந்த 18 பேரில் 5 நேபாள பிக்குகளும் ஒரு வியட்நாம் பிக்கும் 09 பெண்களும் 03 ஆண்களும் அடங்குகின்றனர்.

இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புஸல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.சாஜில்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -