இலங்கை அதிவேக நெடுஞ்சாலைகளில் ஒருநாள் வருமானத்தை பாருங்கள் - சாதனை

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஒரு நாளைக்கு கிடைத்த அதிக வருமானம் நேற்று (10) பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அதிவேக நெடுஞ்சாலைகள் முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ். ஓபநாயக்க இது தொடர்பில் அறிவித்துள்ளார். 

இவ்வருடத்தில்தான் இப்பாதைகளில் அதிக வாகனங்கள் பிரயாணம் செய்துள்ளன. அதிக வருமானமும் இவ்வருடத்திலேயே பதிவாகியுள்ளன. தெற்கு அதிவேகப் பாதையினால் மாத்திரம் 17.06 மில்லியன் வருமானம் கிடைத்துள்ளது. அதிவேக பாதைகளின் முழுமையான வருமானமாக 26.05 மில்லியன் ரூபா கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.  தெற்கு அதிவேக பாதையின் ஒருநாள் சாதாரண வருமானம் 11 மில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது. இதன்படி, நேற்றைய தினம் இந்த வருமானம் சாதாரண வருமானத்தை விடவும் 6 மில்லியன் அதிகமாக கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -