அடா­வ­டித்­தனம் தொடந்தால் துப்­பாக்­சி­சூடு நடத்­தவும் தயங்க மாட்டோம்- பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர்

ம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தில் இரண்டு கப்­பல்­களைச் சிறைப்­ப­டுத்­தி­யுள்­ள­மை­யினால் கடற்­ப­டை­யினர் தலை­யிட வேண்டி ஏற்­பட்­டது. எனினும் ஊழி­யர்­களின் அடா­வ­டித்­தனம் தொடந்தால் துப்­பாக்­சி­சூடு நடத்­தவும் தயங்க மாட்டோம் என தெரி­வித்த பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவன் விஜே­வர்­தன.

தொடர்ந்தும் போராட்­டத்தில் ஈடு­பட்டால் கடற்­ப­டையைக் கொண்டு துறை­மு­கத்தை கொண்டு செல்வோம் என்றும் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று சனிக்­கி­ழமை வரவு – செலவு திட்­டத்தின் நிதி அமைச்சு குழு நிலை விவாதத்தின் போது சர்ச்­சைக்­குட்­ப­டுத்­தப்­பட்ட அதி­கா­ரியின் கேள்­விக்கு பதி­ல­ளிக்கும் போதே அவர் மேற்­கண்ட வாறு தெரி­வித்தார்.

அம்­பாந்­தோட்டை துறை­முக ஊழி­யர்­களின் தாக்­குதல் தொடர்பில் கடற்­படை தள­ப­தி­யி­டமும் அம்­பாந்­தோட்டை கட்­டளைத் தள­ப­தி­யிடமும் விசா­ரித்தேன். இங்கு ஊழி­யர்­க­ளுக்கு தாக்­குதல் நடத்­தப்­படவில்லை. இது முற்­றிலும் பொய்­யாகும்.

அங்­குள்ள ஊழி­யர்கள் இரு கப்­பல்­களைச் சிறைப்­பி­டித்­துள்­ளனர். இதன் கார­ண­மா­கவே கடற்­ப­டை­யினர் தலை­யிட்­டனர். எனினும் தாக்­குதல் நடத்­த­வில்லை. இங்­குள்ள கப்­பல்­களில் ஜப்பான் நாட்­டுக்கு சொந்­த­மான கப்­பலும் உள்­ளது. இதனால் சர்­வ­தேச அளவில் பிரச்­சி­னைகள் ஏற்­படும்.

இந்­நி­லையில் தற்­போது பிரச்­சினை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரப்­பட்­டுள்­ளது. எனினும் ஊழி­யர்கள் தொடர்ந்தும் இவ்­வாறு செயற்­பட்டால் துப்­பாக்கிச்சூடு நடத்த தயங்க மாட்டோம். அத்­துடன் போராட்­டத்தை உடன் கைவிட வேண்டும் இல்­லையேல் கடற்­ப­டை­யி­னரைக் கொண்டு துறை­மு­கத்தைக் கொண்டு செல்வோம்.

இதன் போது நாமல் ராஜபக் ஷ எம்.பி. பேசு­கை­யில் ­க­டற்­படை தாக்குதல் நடத்தவில்லை எனக் கூற வேண்டாம். 8 பேர் காயமடைந்துள்ளர் இங்கு பேசிய சுஜிவ சேனசிங்க எம்.பி. யார் தாக்கினர் இராணுவத்தினரேயாவர் என்றார்.(வீகே)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -