தௌஹீத் ஜமாஅத் பொதுச் செயலாளர் அப்துல் ராசிக் பிணையில் விடுதலை

கடந்த ஒரு மாத காலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தௌஹீத் ஜமாஅத் பொதுச் செயலாளர் அப்துல் ராசிக் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஞானசார தேரரின் இஸ்லாம் மீதான விமர்சனத்துக்கு கடும் தொனியில் பதிலளித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த அப்துல் ராசிக், கொழும்பு நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

ஆரம்பத்தில் 14 நாட்கள் விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டிருந்த அவருக்கு மேலும் 14 நாட்கள் விளக்கமறியலை நீடித்து கடந்த மாதம் 25ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இன்று அவர் கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோது, எந்தவொரு மதத்துக்கும் இழுக்கு ஏற்படும் வகையில் கருத்து வெளியிடக் கூடாது என்ற கடுமையான நிபந்தனையுடன் அப்துல் ராசிக் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ரூபாய் பத்தாயிரம் ரொக்கம் மற்றும் இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவித்து நீதிபதி சந்தன கலன்சூரிய உத்தரவிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -